உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நாடு சீனா. அங்குள்ள மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கையுடன் மாஸ்க்கையும் கொண்டு செல்வது வழக்கம். இதனால், காற்றை சுத்தமாக்கும் உலகின் மிக உயர கருவியுடன் கூடிய கோபுரத்தை அமைக்க சீன அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
மேற்கு சீனாவின் ஷான்ஷி மாகாணத்தின் ஜியான் நகரில் இந்த கோபுரம் அமைக்கப்பட உள்ளது. 328 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் மூலம், 3.9 சதுர மைல் சுற்றளவுக்குள்ளான பகுதியில் காற்றை சுத்தப்படுத்துமாம். நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் கியூமிக் மீட்டர் காற்றை சுத்தமாக்கும். சோதனை முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.