மரத்திய மொழியில் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரபல இளம் நடிகர் பிரபுல் பெலிரோ ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
22 வயதான அவர் இன்று அதிகாலை காலை மும்பை மலாட் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பயணித்து கொண்டிருந்த ரயிலில் ஏற முற்பட்ட போது கால் தவறி அவர் தண்டவாளத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரது தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளது.