இது குறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எங்களிடம் தரமான பிரிண்ட் உள்ள பைரேட்டட் காபி உள்ளது. நாங்கள் கேட்கும் பணம் தராவிட்டால் அதை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று ராகுல் மேத்தா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி பாகுபலி 2 கரண் ஜோஹார் மற்றும் தயாரிப்பாளர்களை மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பீகாரில் உள்ள தியேட்டர் உரிமையாளர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 11ம் தேதி ஹைதராபாத்தின் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் மேத்தா கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்பேரில் டெல்லியில் வைத்து ஜிதேந்திர மேத்தா, தவ்பிக், முகமது அலி மற்றும் பீகாரில் திவாகர் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்