மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரதும் உள்ளம் கவர்ந்த நாயகியானார் சாய் பல்லவி அதன்பிறகு நிறைய படங்கள் வந்தபோதும் படிப்பை தொடர்வதற்காக வெளிநாடு சென்றுவிட்டார் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அப்போதும் அவருக்கு மவுசு குறையவில்லை
தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்டவர் பின்னர் அதிலிருந்து விலகினார். இதற்கிடையில் தெலுங்கில் வந்த வாய்ப்பை ஏற்று நடித்தார். தற்போது தமிழில் விஜய் இயக்கத்தில் கரு, செல்வராகவன் இயக்க சூர்யா நடிக்கும் புதியபடம், தனுஷின் மாரி 2 படங்களில் நடிக்கிறார்.
படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார் என்று சாய்பல்லவி பற்றி சர்ச்சை உள்ளது. ஆனாலும் அவர் நடித்த தெலுங்கு படம் ஹிட்டானதால் தாமதத்தைபற்றி கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் உள்ள நடிகைகள் லட்சங்களில்தான் சம்பளம் பெற்றுவருகின்றனர். சாய் பல்லவிக்கும் அப்படித்தான் சம்பளம் தரப்பட்டது.
தற்போது வாய்ப்புகள் போட்டிப்போட்டுக்கொண்டு வருவதால் சம்பளத்தை திடீரென்று உயர்த்தி இருக்கிறார். சர்வானந்த் நடிக்கும் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒரு கோடியே 40 லட்சம் வாங்கியிருக்கிறாராம். காஜல் அகர்வால், நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் ஸ்டார் அந்தஸ்த்தை அடைந்தபிறகே கோடிகளில் சம்பளம் பெற்றனர். ஆனால் சாய்பல்லவி இப்போதே கோடிகளை தொட்டிருப்பது ஸ்டார் நடிகைகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.