14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடமாக கழுத்தில் கட்டப்பட்ட தாலியை மறைத்து பாடசாலை வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்தேறியுள்ளது.
அவர் தனது கணவர் கட்டிய தாலியை கடந்த ஒரு வருடமாக மறைத்து தமது கழுத்தில் அணிந்த நிலையிலேயே அவர் பாடசாலைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் கழுத்தில் தாலி இருப்பதை கண்ட நபர் ஒருவர் மகளிர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.