நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். பல நடிகைகளுக்கும் பிடித்த நடிகராய் நடிகர் ஆர்யா இருந்தார்.
ஆனால், அண்மைக்காலமாக அவர் நடிப்பில் வெளியான படங்களில் சில படுதோல்வி அடைந்தன. இதனால், அவர் பெரும் நஷ்டம் அடைந்தார். அத்துடன் அடுத்த கட்ட பட வாய்ப்பின்றி தள்ளாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பல பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. அதில் 16 பெண்களை ஆர்யா தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களை வைத்து ஆர்யா ஒரு சின்னத்திரையை எடுக்க போவதாக கூறப்படுகிறது.