Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை பின்னணியில் இருப்பது என்ன....!!!

Indian news - காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை பின்னணியில் இருப்பது என்ன....!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,924 Views
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கார்த்திக் (வயது 22). ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். பாரதி (23), பக்கத்து ஊரை சேர்ந்த 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் காதல் அரும்பியது. கடந்த 5ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2 பேரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து பாரதியின் பெற்றோர் மகளை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுப்பது என முடிவு செய்தனர்.

அதன்படி, பாரதிக்கு மாப்பிள்ளை பார்த்து, வருகிற 26-ந்தேதி திருமணத்துக்கான நாளும் குறிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதுபற்றி பாரதி காதலன் கார்த்திக்கிடம் தெரிவித்தார். இதனால் இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை பாரதி வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரது உறவினர்கள் பாரதியை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இதையறிந்த பாரதியின் காதலர் கார்த்திக் கதறி அழுதார். அவரும் வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல்ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இருகிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top