சிரியாவின் ஜனநாயக படையினர், சிறுவர் போராளிகளை பலவந்தமாக இணைத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிரியாவின் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜுலை முதல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் சிரியாவில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பலவந்தமாக சிறார்கள் உள்ளிட்ட பொதுமக்களை, சிரிய ஜனநாயக போராளிகள் யுத்தத்தில் இணைத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பல்வேறு குற்றச் செயல்களை புரிகின்ற ஏனைய தரப்புகளுடனும் சிரிய ஜனநாயக போராளிகள் இணைந்து செயற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.