சீனாவின் முதலாவது ஆராய்ச்சி விண்வெளி நிலையமான டியாங்கொங் 01 பூமியை இன்னும் இரண்டு வாரங்களில் மோதவுள்ளதாக விண்வெளித்துறை மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 8 .5 தொன் எடை கொண்ட இந்த குறித்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ,ரஸ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011 ம் ஆண்டு வெற்றிகரமாக சீனா விண்வெளியில் கட்டி முடித்திருந்தது. ஆனால் 2016 ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இன்னும் இரண்டு வாரங்களில் இப்படி ஒரு அனர்த்தம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மணிக்கு சுமார் 27000km அதி வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் டியாங்கொங் 01 பூமி வளிமண்டலத்திற்கு நுழைந்தவுடன் எரியத்தொடங்கிவிடும் .
இவ் அனர்த்தம் தொடர்பில் மற்றும் போமியை மோதுவதால் ஏற்படப்போகும் பாதக நிலைமைகள் தொடர்பிலும் இதுவரை எதுவிதமான மேலதிக தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.