உறுதியான தினம் ஒன்று ஒதுக்கப்பட்டதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் இந்த சந்திப்பை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த தினம் ஹம்பாந்தொட்டையில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய் பாதுகாவளர் ஒருவர் துப்பாக்கியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.