சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அண்மைக்காலமாக நடிப்பை தவிர படத் தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
தான் ஒவ்வொரு முறையும் விருதுகளை பெறும்போது, அதனை பார்த்து மகிழ தனது அப்பா உயிருடன் இல்லையே என்ற வருத்தத்தை அவரே பல இடங்களில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது தந்தையுடன் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை அவரது ரசிகை ஒருவர் வரைந்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் ஆசையை ஓவியம் மூலம் நிறைவேற்றி வைத்துள்ள அந்த ரசிகையின் செயல் சிவகார்த்திகேயனுக்கு நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஓவியத்தை கண்ட அடுத்த நொடியிலேயே நடிகர் சிவகார்த்திகேயன் கண் கலங்கியதாக தெரிவித்துள்ளார்.