அப்படி என்னதான் டிம் ஃபிரைடு செய்கிறார் ? பொதுவாக பாம்புகள் என்றாலே நமக்கு சொல்ல முடியாத பயம் உருவாகி விடும் .
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த டிம் ஃபிரைடு என்ற பாம்புகள் ஆராட்ச்சியாளர், கொடிய விஷம் கொண்ட ''கறுப்பு மாம்பா பாம்பினை" தனது கையில் கடிக்க வைத்து, தான் அதிக விஷ எதிர்ப்பு கொண்ட மனிதர் என்று நிரூபித்துள்ளார்.
இவர் இயற்கையிலேயே அதீத நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட மனிதர் என்று அழைக்கப்படுகின்ற போதும் , தன்னை சுயபரிசோதனை செய்யும் வகையில், அதிக விஷம் கொண்ட ஆப்பிரிக்காவின் கறுப்பு மாம்பா என்ற பாம்பினை கொண்டு தன்னைக் கடிக்க வைத்து அதிக விஷ எதிர்ப்பு கொண்ட மனிதர் என்று நிரூபித்துள்ளார்.
ஏன் இப்படி பாம்புகளோடு விளையாட்டு என்று கேட்டால், என்னுடைய நோக்கம் பாம்புகளைப் பற்றியும், விஷ எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என்று பொறுப்போடு பதில் கூறியுள்ளார்.
முடிவாக டிம் ஃபிரைடுவின் உடம்பு முழுக்க ரத்தம் விஷமாத்தான் இருக்கும் என்று நீங்க யோசிக்கிறீங்கள்!! ....ம் ம் எங்களுக்கும் இதே சந்தேகம் தான் .............!