Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
30
பரீட்சை வினாத்தாள் வாசிக்க 15 நிமிடம் !!!

Sooriyan Gossip - பரீட்சை வினாத்தாள் வாசிக்க 15 நிமிடம் !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,471 Views

வழமையாகவே பரீட்சை என்றால் ஆரம்பிக்கப்படும் நேரத்திலிருந்து முதல் ஐந்து நிமிடத்தை வினாத்தாள் வாசிக்க பயன்படுத்த வேண்டுமென்று நம் ஆசிரியர்கள் சொல்வதுண்டு.

ஆனால் தற்போது பொதுப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அதிஷ்டமாக பரீட்சை எழுத முன்பதாக குறித்த பரிட்சை வினாத்தாளை வாசிக்க மட்டும் 15 நிமி­டங்கள் வழங்­கப்­படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதா­வது வாசிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு அதன்­பி­றகே பரீட்சை எழுத அனு­ம­திக்­கப்­ப­டுவர் என்று இலங்­கைப்­ப­ரீட்­சைகள் திணைக்­கள உயரதிகாரி ஒருவர் தெரி­வித்தார்.

அதுமட்டுமல்லாமல் பல புதிய யுத்திகளையும் முயற்சிகளையும் இதுவரை காணாத மாற்­றங்­களையும் பரீட்­சைகள் திணைக்களம் இவ்­வாண்­டி­லி­ருந்து செயற்படுத்தவுள்ளது.

2001ஆம் ஆண்­டிற்­குப்­பின்­ன­ரான பொதுப்­ப­ரீட்சைப் பெறு­பே­று­களை உறு­திப்­ப­டுத்த வல­யக்­கல்­விப்­ப­ணிப்­பா­ளர்­க­ளுக்கு வசதி
ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டி­லி­ருந்து தரம்12ற்கான பொது தக­வல்­தொ­ழி­ல்நுட்ப பரீட்சை ஒன்­லைனில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. பகுதி 1 பல்­தேர்வு வினாக்கள் பகுதி2 பிர­யோ­கப்­ப­யிற்சி.

பொதுப்­ப­ரீட்சை நடை­பெறும் மண்­ட­பங்­க­ளுக்கு மேற்­பார்­வை­யாளர் மட்டுமல்லாது நோக்­கு­னர்­க­ளும் , மேல­தி­க­மாக மேல­திக மேற்­பார்­வையாளர்களும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.அவர்கள் நோக்­கு­னர்­களை மேற்­பார்வை செய்­வார்கள்.

அதுமட்டுமல்லாது ஆகஸ்ட் புல­மைப் ­ப­ரீட்சை முற்­ப­கு­தியில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே­போல க.பொத. சாதா­ர­ண­தரப் பரீட்சை டிசம்பர் முதல்­வா­ரத்­திலே ஆரம்­பிப்­ப­துடன் அந்த மாதத்­தி­லேயே மதிப்­பீட்­டையும் நடத்­தி­மு­டிக்க ஏற்­பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் க.பொ.த. சா.தர மற்றும் உயர்­தர சான்­றி­தழ்­களின் பிர­தி­க­ளைப்­பெ­ற­வி­ரும்­பினால் ஒன்­லைனில் விண்ணப்பிக்க  முடியும். ஆனால் அதற்­கான கட்­ட­ணத்தை அரு­கி­லுள்ள வங்­கி­யில் ­செலுத்த வேண்டும் .செலுத்திய பின் அதன் இலக்­கத்தை   ஒன்­லைனில் அறி­வித்தால் குறித்த பிர­தி­களை கையில்­ கி­டைக்­கு­மாறு அல்­லது கொரியர் தபாலில் அனுப்ப நட­வ­டிக்கை      மேற்­கொள்­ளப்­படும்.

தரம் 6 தொடக்கம் தரம் 9 வரை ஒதுக்கப்படாத பாடவேளை என்று ஒன்றிருந்து வந்துள்ளது. இனிமேல் அப்பாடவேளைக்கு தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் பாடத்தினை இடுமாறு கோரப்பட்டுள்ளது.அப்பாடத்திற்கு கல்வியியல்கல்லூரி பயிற்சிமுடித்தவர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளத

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top