வழமையாகவே பரீட்சை என்றால் ஆரம்பிக்கப்படும் நேரத்திலிருந்து முதல் ஐந்து நிமிடத்தை வினாத்தாள் வாசிக்க பயன்படுத்த வேண்டுமென்று நம் ஆசிரியர்கள் சொல்வதுண்டு.
ஆனால் தற்போது பொதுப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அதிஷ்டமாக பரீட்சை எழுத முன்பதாக குறித்த பரிட்சை வினாத்தாளை வாசிக்க மட்டும் 15 நிமிடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது வாசிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு அதன்பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என்று இலங்கைப்பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் பல புதிய யுத்திகளையும் முயற்சிகளையும் இதுவரை காணாத மாற்றங்களையும் பரீட்சைகள் திணைக்களம் இவ்வாண்டிலிருந்து செயற்படுத்தவுள்ளது.
2001ஆம் ஆண்டிற்குப்பின்னரான பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளை உறுதிப்படுத்த வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு வசதி
ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டிலிருந்து தரம்12ற்கான பொது தகவல்தொழில்நுட்ப பரீட்சை ஒன்லைனில் நடத்தப்படவுள்ளது. பகுதி 1 பல்தேர்வு வினாக்கள் பகுதி2 பிரயோகப்பயிற்சி.
பொதுப்பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு மேற்பார்வையாளர் மட்டுமல்லாது நோக்குனர்களும் , மேலதிகமாக மேலதிக மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.அவர்கள் நோக்குனர்களை மேற்பார்வை செய்வார்கள்.
அதுமட்டுமல்லாது ஆகஸ்ட் புலமைப் பரீட்சை முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது. அதேபோல க.பொத. சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் முதல்வாரத்திலே ஆரம்பிப்பதுடன் அந்த மாதத்திலேயே மதிப்பீட்டையும் நடத்திமுடிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் க.பொ.த. சா.தர மற்றும் உயர்தர சான்றிதழ்களின் பிரதிகளைப்பெறவிரும்பினால் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும். ஆனால் அதற்கான கட்டணத்தை அருகிலுள்ள வங்கியில் செலுத்த வேண்டும் .செலுத்திய பின் அதன் இலக்கத்தை ஒன்லைனில் அறிவித்தால் குறித்த பிரதிகளை கையில் கிடைக்குமாறு அல்லது கொரியர் தபாலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தரம் 6 தொடக்கம் தரம் 9 வரை ஒதுக்கப்படாத பாடவேளை என்று ஒன்றிருந்து வந்துள்ளது. இனிமேல் அப்பாடவேளைக்கு தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் பாடத்தினை இடுமாறு கோரப்பட்டுள்ளது.அப்பாடத்திற்கு கல்வியியல்கல்லூரி பயிற்சிமுடித்தவர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளத