பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் தனது தவறை உணர்ந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தான் செய்த தவறை உணர்ந்த டேவிட் வோர்னர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் தனது டுவிட்டர் தளத்தில் " அவுஸ்திரேலியா மற்றும் உலகத்திலுள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்த தவறு கிரிக்கெட் துறைக்கு பெரும் பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளது.இத் தவறினால் நான் சிறு வயதிலிருந்து நேசித்த கிரிக்கெட் மீது பெரும் கறை படிந்துள்ளது. அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என வோர்னர் குறிப்பிட்டுள்ளார்.