புத்தளம், ஆராச்சிகட்டுவ நல்லதரன்கட்டுவ பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, சந்தேக நபரின் காதலி என்பதோடு, சந்தேக நபர் காதலியை பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்து சென்று, துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து, காவல்துறையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர், தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.