கண்ணீர் வரும் போது, எமது கண்கள் இயற்கையாக சுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் கண்களில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் கண்ணீருடன் சேர்த்து வெளியேற்றப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் வாய்விட்டு அழும் போது, அவர்களின் மன அழுத்தம் குறைந்து அமைதியான நிலையினை அடைய முடியும்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும் வல்லமை அழுகைக்கு உள்ளது. கண்ணீர் வெளியேறிய பின்னர், எமது இரத்த அழுத்தம் சீராகுவதாக கூறப்படுகிறது.
நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பலம் அழுகைக்கு உள்ளது. காரணம் அழுகை, நச்சுக்களை அகற்றுவதால் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
அத்துடன் நமது சருமத்தை மென்மைப்படுத்தவும்,அழகுபடுத்தவும் கண்ணீர் துணை புரிவதாக கூறப்படுகிறது.