12 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் வர்த்தக நிலையங்களின் கூரைகளை உடைத்து விட்டு, பெருமளவு பணத்தை கொள்ளையிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொம்பே பிரதேசத்தின் பிரபல பாடசாலையொன்றின் மாணவன் ஒருவனே இத்தகைய கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பாடசாலை மாணவனுக்கு, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உதவியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன், மற்றுமொரு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவத்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.