சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி ஈடுபட்டார்.
தன்னை நடிகர் சங்கத்தின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள மறுப்பதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து இவர் பல பிரபலங்களின் அந்தரங்க தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
பெண்களை இப்படி கேவலமாக பார்ப்பவரின் முகத்திரையினை கிழிக்க போகிறேன் என்று இவர் அதிரடியான கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன், என்னுடன் அடிக்கடி உறவு வைத்துக் கொண்டார் என்று புதிய சர்ச்சைக்குரிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்த புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன் என்றும் நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வடஇந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் பணத்துக்காக தன்னை விற்க உடன் சம்மதிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், என்னை நிர்வாணமாக இருக்க கூறினார்கள். எனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன்,என்றும் கூறியுள்ளார்.
இவரது அண்மைய செயற்பாடுகள் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.