இவர் அதைத்தொடர்ந்து, பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் என்று அந்த தொலைக்காட்சியில் பங்கேற்று வந்தார்.
இதற்கிடையே இவர் சென்னை தியாகராய நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை திடிரென்று காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரைப் பிரிந்து விட்டு தனது தந்தை வீட்டில் நந்தினி வசித்து வந்தார்.
இதில் மனமுடைந்த கார்த்திகேயன், கடந்த ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி விருகம்பாக்கம் விடுதி ஒன்றில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் கார்த்திகேயனின் தாயார், நந்தினி தான் கார்த்திகேயனை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளதாக கடந்த தினம் கூறியுள்ளமை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.