இந்தியாவின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பேராசிரியர் ஒருவர், தமது மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆசிரியை தமது மாணவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, தமது பாலியல் கோரிக்கைக்கு இணங்கினால், பணம் வழங்குவதோடு நல்ல மதிப்பெண்ணும் தரப்படுமென கூறியுள்ளார்.
இது தொடர்பில் கல்லூரி மாணவர்கள், தமது பெற்றோரிடம் முறையிட்டதை அடுத்து, குறித்த ஆசிரியைக்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.