சருமம் அழகாக இருக்க வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது?ஆனால் நாம் நமக்கு இருக்கின்ற பிஸி வேலைகளால் நம் சருமத்தை நாம் கவனிப்பதில்லை.இருந்தாலும் நம்மால் முடிந்த வரை கொஞ்சம் சில இலகு வழிமுறைகளை பின்பற்றலாம்.
சருமப் பொலிவுக்கு முதலில் முக்கியமானது ஆரோக்கியம் நிறைந்த உணவு.இதனை அதிகமாக கவனத்தில் கொண்டாலே பல நோய்களிலிருந்து தப்பித்திடலாம்.
முடிந்தவரை அதிக இனிப்பு வகைகளை உட்கொள்வதை தவிர்த்திடுங்கள்.
கொழுப்புகுறைந்த உணவுகளையும்,மற்றும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் அதிகமாக உட்கொள்ளுங்கள்.இதனால் உடலில் உள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். சருமமும் பொலிவாகும்.
வெளி ஹோட்டல்கள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நாளுக்கு முழுமையாக எட்டு மணி நேரம் தூங்குங்கள். நன்கு உறங்கும்போதுதான் தோலில் கொலாஜென் உருவாகும். இது, தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களைப் பெருக்கும்.
இரவு நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து, மொபைல் அல்லது டி.வி பார்க்கக் கூடாது. இதனால் கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றி முக அழகை கெடுக்கும்.