கோடை காலமென்றாலே நாம் முதலில் கவனிக்க வேண்டியது நாம் உடுத்தும் ஆடைகள்தான். உடலாரோக்கியமற்ற வகையில் ஆடை அணிவதால் அதுவே சரும பிரச்சினைக்கு காரணமாகி விடும்.லெகின்ஸ் அணிவதால் உடலில் வெளியேறும் வியர்வை உறிஞ்ஜப்படாது. இதனால் வியர்க்குரு, அலர்ஜி உள்ளிட்ட தோல் வியாதிகள் உருவாகிவிடும்.
முடிந்தவரை கோடை காலங்களில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்த்து காட்டன் மற்றும் தளர்வான ஆடைகளை அணிவதே உடலுக்கு சவுகரியமாக இருக்கும்.
கோட் மற்றும் அடர் நிறங்கள் கொண்ட ஆடைகளை தவிர்த்திடுங்கள் காரணம் அடர் நிறங்கள் சூரிய ஒளியை உள்வாங்கி உடல் உஷ்ணத்திற்கு வழிவகுக்கும் என்பதாலாகும்