புதிதாக திருமணமான தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது, பொதுவான கருத்து.
ஆனால் இது தவறான தகவல். திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அங்குள்ள பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
திருமணமான 2034 தம்பதிகளை தெரிவு செய்து அவர்களிடம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் தாம்பத்திய வாழ்க்கையின் ஆர்வம் மேலும் அதிகரித்து கணவன்- மனைவி இருவரும் மிகவும் அன்பாக நடந்து கொள்கின்றமை தெரியவந்துள்ளது.