இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா, தற்போது அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த நிகழ்ச்சியில் சுஜாவுக்கும், கணேஷுக்கு சேர்த்து ஒரு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்றுக்கொண்ட சுஜா, மேடையினை விட்டு கீழே இறங்கினார்.
அப்போது பெண் ஊழியர் ஒருவர் ,மற்றுமொருவருக்கும் இந்த விருதை கொடுக்க வேண்டுமென கூறி விருதை பெற்றுக்கொண்டார்.
இதனால் கடுப்பான சுஜா, செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து இவ்ளோ பெரிய சேனலுக்கு ஒரு விருது வாங்க கூட காசு இல்லையா? இப்படி பண்ண அசிங்கமா இல்லையா?
பிக் பாஸ் எங்களுக்கு புகழை மட்டும் தான் கொடுத்தது. யாருக்கும் வெற்றியை தரவில்லை என கோபமாக விமர்சனம் செய்துள்ளார்.
சுஜா வெளியிட்ட இந்த கருத்துக்களால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.