பெண்களின் பிரசவ கால பிரச்சினைகளும் ,பெண்களுக்கு பிரசவத்தின் பின் எதிர் நோக்கபோகும் பிரச்சனைகளும் முற்றிலும் மாறுபட்டவை.பிரசவ காலத்தில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டுமோ அதைவிட அதிகமாக பிரசவத்தின் பின்னும் இருக்க வேண்டும்.
பிரசவத்தின் பின்பு குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றத்தினாலும் ,இரத்த ஓட்ட அளவு மாறுபடுவதாலும்,உடலிலுள்ள வெப்பக்கட்டுப்பாட்டில் மாற்றங்கள் நிகழ்வதால் காய்ச்சல் நடுக்கம் துடிப்பு போன்ற ஓர் வகை வலி ஏற்படும்.
உடல் எடை குறைந்தது ஆறு முதல் எட்டு கிலோ வரை குறைந்திருக்கும்.காரணம் குழந்தையின் எடையும் பன்னீர்குட எடைக்கும் குறைவதனாலாகும்.
மூலம் எனப்படும் ஆசனவாயில் உள்ள இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும்.
இதனுடன் மாதவிலக்கின்போது வெளிப்பட்ட உதிரப்போக்கை விட அதிகமாக சிறு சிறு கட்டியாக உதிரம் வெளியாகும்.
பிரசவித்து சில நாட்களின் பின் கருப்பை சுருங்கி விரியும் .இதனால் அடி வயிற்றில் வலி அதிக இரத்தபோக்கு போன்றவை ஏற்படும்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மார்பகத்தில் மற்றும் மார்பக காம்புகளில் அதிக வலி ஏற்படக்கூடும்.
பிரசவித்த பின் ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பிற்கும் இடையிலுள்ள தோல் மருத்துவரால் தைக்கப்பட்டிருக்கும்.இதனால் மலம்கழிக்கும் போது அதிக வலி ஏற்படும். அத்தோடு தும்மலின் போதும் இருமலின் போதும் இந்த வலியை உணர முடியும்.அந்த வேளைகளில் நம்மையறியாமல் சிறுநீர் வெளியேறவும் வாய்ப்பதிகம்.