உட்காந்து வேலை செய்யும் நண்பராக நீங்களிருந்தால் உடனடியாக நொறுக்குத்தீனி உண்பதை உடனடியாக நிறுத்திடுங்கள்.காரணம் இப்படி உண்ணும்போது உடலில் கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அளவுக்கதிகமாக கூடுகின்றது.
உடல் எடை அதிகமாக காரணம் நீங்கள் வேலையின் நடுவே உண்ணும் கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் அதிக இனிப்பு வகைகள் தான் .இதில் அதிக கலோரிகள் உள்ளடங்கியுள்ளதால் உட்காந்து வேலை செய்யும் போது கொழுப்பு கரைக்கப்படாமல் உடல் எடை கூடும்.
உடல் எடை குறைப்பதற்கு முதலில் நீங்கள் வெள்ளை மா உணவுகள் அதிக இனிப்புவகை உணவுகள், அதிக எண்ணெய் கொண்ட பொரித்த உணவுகளை உடன் நிறுத்த வேண்டும்.
மாலை வேளையில் தேநீர் பருகும் போது பசித்தால் ஏதாவது இரண்டு பிஸ்கட் அல்லது எண்ணெய் தன்மை குறைவாகக்கொண்ட உணவை அளவாக உண்ணலாம்.முடிந்தவரை தவிர்ப்பது நலம்.
இடைக்கிடையே பசித்தால் முடிந்த வரை தண்ணீர் குடியுங்கள்.அல்லது அதிகமாக பழங்களை எவ்வளவு வேண்டுமென்றாலும் உண்ணுங்கள்.
இப்படி செய்தால் நோய்களிலிருந்து உங்களை பாதுகாப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.