கஹவத்தை கொட்டகெதன பிரதேசத்தில் தனது தாயாரை கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது மகனை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கும்படி பெல்மதுல்லை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விவகாரத்து பெற்று பிரிந்து சென்ற மனைவி மற்றும் சிறு வயது குழந்தைகள் இருவர் ஆகியோரின் வாழ்வாதாரத்துக்கு பணம் செலுத்தும் பொருட்டு நகைகளைத் திருடி வந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ரஷ்யாவின் , மொஸ்கோவில் அமைந்துள்ள தேசிய மருத்துவ ஆராச்சி பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இலங்கை மாணவரொருவன் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விசாக பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அன்னதான மையங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.