‘கொரோனா’ மற்றும் ஊரடங்கு பற்றியும்,ஜோதிகா பேச்சு பற்றியும் நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.அவர் கூறியதாவது:-''கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக மிக சிறப்பாக செயல்பட்டவர்கள்,ஊடக துறையினர்.தங்கள் உயிரை பற்றி யோசிக்காமல் செய்திகளை சேகரித்து கொண்டுவந்து மக்களிடம் சேர்க்கிறார்கள்.இது பாராட்டுக்குரியது.அணுசக்தி போரை விட,செய்தித்தாள் சக்தி வாய்ந்தது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.