யாரிடமாவது, `என்ன செய்கிறீர்கள் ...' என்று கேட்கும்போது, `சும்மாதான் ' என்று பதில் சொன்னால்,எங்கள்
றியாக்ஷன் என்னவாக இருக்கும்? கோபப்படுவோம் ... `சும்மா இருக்கிறேன்' - இந்த வார்த்தையை யார் சொல்லிக் கேட்டாலும் நம்மில் பலருக்கு கோபம்தான் வரும். ஆனால், சும்மா இருப்பதை மன நிம்மதிக்கான ஒரு வாழ்வியல் முறை என்று சொல்லலாம்.
இதனை தான் டச் மக்களும் சொல்கிறார்கள்.தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி, சும்மா இருங்கள் ' என பரிந்துரைக்கிறார்கள் அவர்கள். டச் மொழியில் `நிக்சென்' என்றால், `எதுவும் செய்யாமல் இருப்பது (Doing nothing)' என்று பொருள்.