இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் 14,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு 5ஆவது முறையாக ஜூன் 30 திகதி வரை நீடிக்கப்படுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது.இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,461 இலிருந்து 4,26,910 ஆக உயர்ந்துள்ளது.அவர்களில் 1,74,387 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.