கடந்த 21ம் திகதி நிகழ்ந்த சூரிய கிரகணம் பல ஆசிய நாடுகளுக்கு தெளிவாக தெரிந்தது.முழு கிரகணவேளையில் பூமியில் இருந்து பார்க்கும்போது 'நெருப்பு வளையம்' போல காட்சி அளித்தது.
அதே நேரத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பூமியைப் பார்த்தபோது, நிலவின் நிழல், பூமி மீது விழுந்தது தென்பட்டது. அதை கிறிஸ் காசிடி என்ற, 'நாசா' விண்வெளி வீரர் படம் பிடித்து, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார்.பூமியில் இருந்து வெகு தொலைவில் நிலவு இருந்ததால், அதன் நிழல் பூமியின் சிறிய பகுதியில் மட்டும் விழுந்ததை, நாசா வீரரின் புகைப்படம், தெளிவாக விளக்குகிறது.