பல நாடுகள் தப்பான வழியில் செல்கின்றன. இதனால் நிலைமை மேலும், மேலும் மோசமாகும் என்று, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சில நாடுகளின் அரசுகள் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.
பல நாடுகள் தப்பான பாதையில் செல்கின்றன என்று ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்த வைரஸ் மக்களின் முதல் எதிரியாக இருக்கிறது. பல அரசுகளின், மக்களின் நடவடிக்கை இதைப் பிரதிபலிப்பதாக இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த தொற்று ஒரே வழியில்தான் போகும். அதாவது மேலும் மேலும், மேலும், மேலும் மோசமாகும்" என்றார் டெட்ரோஸ்.