Sooriyan Gossip - ''நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள்'' - பிக்பொஸ் வீட்டில் பொங்கிய நிஷா - காணொளி உள்ளே...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,093 Views
பரபரப்பை உண்டாக்கும் வண்ணம் ஒவ்வொரு நாளும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் நிறைய டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய பிக்போஸ் டாஸ்கில் ஒவ்வொருவரும் பட்டிமன்ற பேச்சாளர்களாக மாறிவிட்டனர். பட்டிமன்றத்தின் தலைப்பு ’பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் மற்றும் ‘பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம்’ என்பதாகும்.
''பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம்’' என்ற தலைப்பில் வேல்முருகன் உள்ளிட்ட சிலர் பேசுகின்றனர். அதேபோல் ‘'பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம்’' என அனிதா, ரியோ ஆகியோர் பேசுகின்றனர். அனிதா உண்மையிலேயே பட்டிமன்ற பேச்சாளர் என்பதால் அவருடைய பேச்சுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்த பட்டிமன்றத்தில் அறந்தாங்கி நிஷா பேசிய போது, ‘'புரணி பேசறது அழகுங்க, ஒருவரது உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும்போது தான் அந்த புரணி அசிங்கம். அந்த புரணியை வெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க’ என்று ஆவேசமாக பேசினார்.
இந்த பட்டிமன்றம் இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்