இந்தியாவிலுள்ள விழுப்புரத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், 13 வயதான சிறுவன் ஒருவரை, கழுத்தறுத்துக் கொலை செய்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுமாறு அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதற்கு குறித்த சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், குறித்த சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞர், சிறுவனின் உடலத்தை, கிராமத்திலுள்ள தோட்டப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளார்.
இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்துறை நிலையத்தில், தனது மகனைக் காணவில்லை என தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது சந்தேக நபரான இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த இளைஞர், சிறுவனைக் கொலை செய்தமை கண்டறியப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.