ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி கூடம் ஒன்றிற்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு உயர்நிலை வகுப்புப் பாடங்களை வழங்கும் தனியார் கல்வி கூடத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என ஐஎஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
தற்கொலைக் குண்டு தாக்குதல்தாரி அந்த கல்வி கூடத்திற்குள் நுழைய முற்பட்டார் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல்தாரி பாதுகாவலர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டவுடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.