விஜய் மக்கள் இயக்கம்,அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.மேலும்,அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும்,விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்திருந்தார்.
இதையறிந்த நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில்.இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருத்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில்,அசோசியேஷன் (Association) தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார்.எஸ்.ஏ.சி.கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை.அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி.இடம் விஜய் கூறியிருந்தார்.ஆனால் அவர் கேட்கவில்லை.விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது.எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் பதவியில் இருந்தும் நான் விலகிவிட்டேன் என்கிறார் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா.