இந்தியாவிலுள்ள மும்மையில் கழிவறை நீரைக் கொண்டு பானிபூரி தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பானி பூரி என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்த இனிப்பு பண்டமாகும். எனினும் பல கடைகளில் இத்தகைய உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவி வருகின்றது.
இதனிடையே இந்தியாவின் மும்பையிலுள்ள பிரபல பானிபூரி கடையில் எந்த நேரமும் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணமாக இருப்பார்கள். அந்த கடையில் உள்ள பானிபூரி மிகுந்த சுவையாக இருப்பதன் காரணமாகவே, அதிக வாடிக்கையாளர்கள் குறித்த கடைக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் கடையின் ஊழியர் ஒருவர், பானி பூரி தயாரிக்க அந்த கடையின் கழிவறை நீரை பயன்படுத்தியமை CCTV கெமராவில் பதிவானது. இந்த விடயம் ஒருவாறு வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து அந்த கடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த கடையில் வரிசையாக நின்று பானிபூரி வாங்கிய வாடிக்கையாளர்கள் மிகுந்த பீதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.