பூந்தமல்லி, சுமத்திரா பகுதியைச் சேர்ந்த அரிசி வியாபாரம் செய்யும் ஆண் ஒருவர் குன்றத்தூர் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதிக்கு கடந்த 4 வருடங்களாக குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பெற்றோரின் வீட்டிற்கு அந்த பெண் வந்துள்ளார். இந்நிலையில் அவரை பார்க்க அவரது கணவர் அங்கு சென்றுள்ளார்.
இருவரும் மாடியில் நின்று பேசி கொண்டிருந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை சரமாரியாக அறுத்துவிட்டு தப்பி ஓடினார்.
ரத்தவெள்ளத்தில் அலறியபடி மயங்கிய பெண்ணை அவரது பெற்றோர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.