இந்தியாவின் குஜராத் மாநிலம்,அஹமதாபாத்தில் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மொட்டேரா மைதானம் திகழ்கிறது.சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மைதானம் ரூபா.700 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் திகழ்ந்தது.
இந்த சாதனையை இப்போது இந்தியாவின் மொட்டேரா மைதானம் தன்வசமாக்கியுள்ளது.இந்த மைதானத்தை பொறுத்த வரையில் ஒரே நேரத்தில் 3000 கார்கள்,10,000 இரு சக்கரவாகன தரிப்பிட வசதியும் உள்ளமை குறிப்பிடதக்கது.அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 95,000 பார்வையாளர்கள் போட்டியை பார்க்க கூடியதாக இருந்தது இப்போது இந்த மொட்டேரா மைதானத்தில் 1,10,000 இரசிகர்கள் போட்டியை அமர்ந்திருந்து இரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக அளவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்தும் மைதானங்கள் இந்தியாவிலே உள்ளன மொத்தம் 52 மைதானங்கள்.இப்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமும் இந்தியாவிலே உள்ளமை மேலும் பெருமை சேர்க்கின்றது. இந்த மொட்டேரா மைதானத்தை பொறுத்த வரையில் கிரிக்கெட் மாத்திரமின்றி கால்பந்து,கூடைப்பந்து,கபடி,குத்துசண்டை,தடகள போட்டிகள்,நீச்சல் போட்டிகள் என்று அனைத்து போட்டிகளும் நடாத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் திறந்து வைக்கப்பட்ட இந்த மைதானத்தில் நாளை முதல் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.இந்திய,இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை இந்த மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.