சீனாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் மட்டுமே வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும் என டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புது டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கொரோனா காரணமாக வெளிநாட்டுப் பயணிகள் சீனாவிற்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.இதன்காரணமாக சீனாவில் படித்துவந்த 23ஆயிரம் இந்திய மாணவர்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார்கள்.
இந்தியாவில் சீன மொபைல் செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டாதால் சீனாவில் படித்துவந்த இந்திய மாணவர்கள் தங்களுடைய படிப்பை ஓன்லைனில் கூட தொடர முடியவில்லை.தற்போது மீண்டும் வெளிநாட்டுப் பயணிகள்,மாணவர்களை அனுமதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.ஆனால் தங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு மட்டுமே மீண்டும் விசா வழங்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் சீனா வந்து படிக்கவுள்ள மாணவர்கள் கண்டிப்பாகச் சீனத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவேண்டும்.தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும்.பிற நாட்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை தங்களுடைய நாட்டில் அனுமதிக்க பரீசிலிக்கப்பட்டு வருகிறது.ஆனால் அதுவரை சீனா தயாரித்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் மட்டுமே சீனாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்”என்று சீனா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.