Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
சூப்பர்ஸ்டாரின் வருகைக்காக காத்திருக்கும் கிராமம்

SooriyanFM Gossip - சூப்பர்ஸ்டாரின் வருகைக்காக காத்திருக்கும் கிராமம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,172 Views
நடிகர் ரஜிகாந்தின் வருகைக்காக ஒரு கிராமம் காத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவடி கதேபதார் என்ற கிராமம்தான், நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊர் என்று சொல்லப்படுகிறது.அங்கு ரஜினியின் குடும்ப பெயரான ‘கெய்க்வாட்’ என்ற பெயர் கொண்ட பலர் வசித்து வருகின்றனர்.அந்த கிராமத்தினர்,நடிகர் ரஜினிகாந்தின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்,‘ரஜினியின் தாத்தா இந்த ஊரில் இருந்துதான் கர்நாடகாவுக்கு சென்றார்.ரஜினியின் குடும்பத்துக்கு இங்கு நிலம் உள்ளது.அவர் இந்த மண்ணின் மைந்தர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு,புனே அருகே லோனோவாலாவில் அவர் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தார்.அப்போது அவரை நாங்கள் சந்தித்தோம்.நாங்கள் அவரிடம் இந்தியில் பேசியபோது,அவர் மராத்தியில் பேசுமாறு கூறினார். அப்போது,தனது சொந்த கிராமமான மாவடி கதேபதாருக்கு ஒருநாள் வருவதாக உறுதியளித்தார்.சொன்னதுபோல் அவர் வருவார் என நம்புகிறோம்.அவருக்கு விருது கிடைத்ததை அறிந்து ஒட்டுமொத்த கிராமமும் பெருமைப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.

இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது  நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,தனது நடிப்பு திறைமையை கண்டுபிடித்து ஊக்குவித்த பஸ் டிரைவரான நண்பன் ராஜ் பகதூருக்கும்,வறுமையில் வாடும்போது தன்னை நடிகனாக்க பல தியாகங்களை செய்த அண்ணன் சத்ய நாராயணா ராவ் கெய்க்வாட்டுக்கும்,குருநாதர் கே.பாலச்சந்தருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top