திருமணம் நடக்க சில நிமிடங்களே இருந்த நிலையில் திருமண மண்டபத்தில் இரு குடும்பத்தினருக்கு இடையிலே ஒரு பூகம்பம் வெடித்தது.
மணமகளின் உடலில் பிறப்பில் இருந்தே இருந்த அடையாளத் தழும்பை பார்த்த மணமகனின் தாய் அதிர்ச்சி அடைந்ததுடன் மணமகளின் உண்மையான பெற்றோர் மற்றும் பூர்விகம் பற்றி இன்னும் ஆழமாக,மணமகளின் குடும்பத்தினரிடம் விசாரிக்கத் தொடங்கினார்.
அப்போதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மணமகளை சாலையோரத்தில் தத்தெடுத்து வளர்த்ததாக அந்த மணமகளின் பெற்றோர் சொல்ல,மணமகனின் பெற்றோரோ அதே 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பெண் குழந்தையை தொலைத்துவிட்டதாகவும் கூற,அந்த பெண் தான் இந்த மணமகள் என்பதை அனைவரும் உறுதி செய்தனர்.
இந்த தகவல் தெரிந்ததும்,தனது நிஜமான தாயை கண்டடைந்த மகிழ்ச்சியில் அவரை கட்டியணைத்து அழுதார் மணமகள்.ஆனால் இதனால் மணமகள் மணமகனுக்கு தங்கை முறையாவதால்,என்ன செய்வதென அறியாமல் அனைவரும் தவித்தனர்.
இதன் பின்னர் இந்த சீன மணமக்கள் கதையில் ஒரு திருப்பம் நடந்துள்ளது.அதன்படி மணமகளை 20 வருடத்துக்கு முன்பு தொலைத்ததால்,வேறு ஒரு ஆண் மகனை தத்தெடுத்து வளர்த்துள்ளனர் அந்த பெற்றோர்.இந்த உண்மை தெரியவந்ததை அடுத்து,இருவரும் உறவுமுறையில் உடன் பிறந்த அண்ணன் - தங்கை இல்லை என்பதால் இருவருக்கும் நிச்சயித்தபடி திருமணம் நடந்து முடிந்தது.