தெலுங்கு,கன்னட மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக இளம் ரசிகர்களை அதிகளவு கவர்ந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கிறார்.
இவர் தற்போது நடிகர் கார்த்திக் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான “சுல்தான்“ திரைப்படத்தின் மூலம் தமிழிலிலும் அறிமுகமாகி இருக்கிறார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி எனப் பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகை ராஷ்மிகா“எந்த மனநிலை வேண்டும்“என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப் புகைப்படத்தில் நடிகை ராஷ்மிகாவின் விதவிதமான ரியாக்ஷன்கள் இடம் பிடித்து இருக்கின்றன.இதைப் பார்த்த நமது நெட்டிசன்கள் நடிகை ராஷ்மிகாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி தெளித்து இருப்பதோடு தங்களது கருத்துகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் 15 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டு இருக்கும் இவரின் புகைப்படத்திற்கு இதுவரை 31 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.