Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
கொவிட் தொற்று குணமடைந்த பின்னரும் தொடரும் பக்க விளைவுகள் - ஆராய்ச்சியில் நிபுணர்கள்.

Sooriyan Gossip - கொவிட் தொற்று குணமடைந்த பின்னரும் தொடரும் பக்க விளைவுகள் - ஆராய்ச்சியில் நிபுணர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

943 Views
'மழை நின்ற பின்னரும் தூவானம்' எனும் பழமொழி எதற்குப் பொருந்துகின்றது இல்லையோ... கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டவர்களிடத்தில் தொடரும் ஒரு சில உடல்நலக் குறைகளுக்கு பொருத்தமாக அமைகின்றது. 

உலகப் பரவல் தொற்றான கொரோனாவின் அச்சுறுத்தலில் உலகின் மொத்த நாடுகளும் அதிர்ந்துகொண்டிருக்க, மரண எண்ணிக்கையும் எகிறிக்கொண்டே செல்கின்றது. இந்தநிலையில், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிப் பின் குணமடைந்தவர்களில் சிலருக்கு ஏற்பட்டுள்ள பின்விளைவுகள் மருத்துவத்துறையினரை கவலை கொள்ளச் செய்துள்ளன.

தொற்றிலிருந்து மீண்ட பின்னரான குறித்த பக்கவிளைவுகளாக செவிகளில் கேட்கும் திறன் குறைவது, மூக்கில் வாசனை முகர்வுத் திறன் குறைதல் மற்றும் சிந்தனை, நினைவாற்றல் குறைவது போன்ற குறைபாடுகள் உடலில் ஏற்படுவதாக வளர்ச்சியடைந்த நாடுகளின் வைத்திய நிபுணர்கள் கூறுவதுடன், இவ்வாறான குறைபாடுகளை நீக்குவதற்கான உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக, 'பிரைன் போக்' எனப்படும் சிந்தனை மந்தம் பிரச்சினையை இல்லாமல் செய்வதற்கான சிகிச்சைகளை வழங்குவதற்கான ஆராச்சிகளில் மருத்துவத்துறை நிபுணர்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதனால், கொரோனா தொற்று நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னராக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளுக்கான மருத்துவப் பிரிவுகள் மேலைத்தேய நாடுகள் பலவற்றில் உருவாக்கப்பட்டுள்ளன.

மனிதர்களுடைய மூளையை கொரோனா வைரஸ் நேரடியாகத் தாக்குவதென்பது மிகவும் அரிதான ஒரு விடயமாகவே மருத்துவர்கள் எடுத்துக்கொண்டாலும், பிராணவாயு பற்றாக்குறை மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் தற்காலிகமாகவேனும் மூளையில் தாக்கத்தை உண்டாக்கவே செய்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னரான இந்தத் தாக்கத்தினால் மூளையுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளான மன ஒருமைப்பாடு, நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன் போன்றவை பல வாரங்களுக்கு மந்த நிலையிலேயே காணப்படுவதாக வைத்திய நிபுணர்களின் ஆராச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்படும் பின்விளைவுகள் காலப்போக்கில் தாமாகவே குணமடையும் என்று அஜாக்கிரதையாக இருக்க முடியாது. இவற்றுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்கான முறைகளை கண்டறிய தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வளர்ச்சியடைந்த நாடுகளின் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top