கார்த்தி,பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பருத்தி வீரன்.
இந்த நிலையில் இந்த படத்தில் பொன்வண்ணன்,சரவணன்,கஞ்சாகருப்பு என பலர் நடித்திருந்த நிலையில் கார்த்தியின் ’அப்பத்தா’ கேரக்டரில் பஞ்சவர்ணம் என்ற நடிகை நடித்திருந்தார்.இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சகர்கள் இடையே பொசிட்டிவ் விமர்சனம் கிடைத்தது.
இந்த நிலையில் நடிகை பஞ்சவர்ணம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன்.அவரின் பாசமான குரலும்,வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது.அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.