கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களுக்கு உண்ண வேண்டிய உணவுகள் சில உள்ளன.
நாம் உண்ணும் கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.
வெண்டைக்காயில் அதிக சத்துக்கள் உள்ளன. கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.
முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.
பொதுவாகவே மீனில் ஒமேகா-3 மற்றும் கல்சியம், விட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது.
அத்துடன் பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கல்சியம் அதிகம் இருக்கிறது.
மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.