அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு பைசர், மொடர்னா மற்றும் ஜொன்சன் & ஜொன்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதி அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது என அமேரிக்கா தெரிவித்துள்ளது.