தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக அனைவரையும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும்படி அரசினால் தினமும் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பொதுமக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கவும், தடுப்பூசிகளின் பெறுமதியினை தெளிவுபடுத்தவும்
அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் முன்மாதிரியாக செயற்பட்டு தடுப்பூசிகளைப் பெற்று அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவருகின்றார்கள் .
அண்மையில் நடிகர் ரஜினிகாந் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார், அதனை தனது சமூகவலைத்தளத்திலும் பதிவேற்றியிருந்தார்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையான நயன்தாரா நேற்றைய தினம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டார்,
அதன் போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.