முகப்பரு காரணமாக பெரிதும் அவதிப்படும் நபர்கள் பலர் உள்ளனர். அதிகமாக தலையில் பொடுகுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் பரு வருகிறது.
உங்களுக்கு பொடுகு இருப்பதாகத் தெரிந்தால் தலை வைத்துப் படுக்கும் தலையணை மூலம் கூட பரு வரலாம். அல்லது வீட்டில் மற்றவருக்கும் வரலாம்.
எனவே படுக்கும் போது தலையணை மேல் ஒரு டவல் போட்டு தினம் அதை எடுத்து கழுவிய பின்னர் மீளவும் பயன்படுத்தவும்.
பரு இருந்தால் முகத்துக்கு சவர்க்காரம் போடக்கூடாது. சவர்க்காரத்தில் உள்ள கொழுப்பு மீண்டும் சருமத் துளைகளை அடைத்துக் கொண்டு விடும். இதனால் பரு சீக்கிரம் மறையாது.
முகத்தில் பரு வருபவர்கள் அனைவருக்குமே அவை கருப்புத் தழும்பாக மாறி விடுவதில்லை. பருவின் மேல் கை வைத்து அந்தப் பருவை கிள்ளி எடுத்தாலோ, அல்லது அழுத்தமாக தேய்த்தாலோ தான் அந்த இடம் பாதிக்கப்பட்டு பரு, தழும்பாக மாறி மாதக் கணக்கில் நிறம் மாறாமல் அப்படியே நின்று விடுகிறது.
எனவே முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள், மிகுந்த அவதானமாகவும், பாதுகாப்பான முறையிலும் அவற்றை அகற்றுவது முக்கியமானதாகும்.
இது குறித்த விளக்கங்களுக்கு தேர்ச்சி பெற்ற சருமம் குறித்த மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது சிறந்ததாகும்.