தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி.விக்ரம் நடித்த சாமுராய்,எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன்,மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.தெலுங்கு,இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு,ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இத் தம்பதிக்கு கடந்த பெப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில்,நடிகை அனிதா,‘அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக்’ என்று கூறி தனது கணவரை கன்னத்தில் அறைவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்க்கவும் என அந்த பதிவில் அனிதா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.